Puthu KaliyammanKarur
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தங்கள் குலங்களை, பேச்சு வழக்கில் கூட்டங்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். மொத்தம் 125 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஒவ்வொரு குலங்களுக்கும் தனித்தனியாக குலதெய்வங்கள் உள்ளன. ஒரே குலங்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள் பங்காளிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். நகரமயமாகாத கிராமங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் குறைந்தது 25 முதல் 50 குடும்பங்கள் வரை வாழ்கிறார்கள். ஆனாலும் மாவட்டங்கள் மாறி வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும் இவர்களுக்குள் மணஉறவு வைத்துக் கொள்வதில்லை. திருமணப் பதிவு நிலையங்களில் மிக முக்கியமாகக் கூட்டம் (குலம்) எதுவெனக் குறிப்பிட வேண்டும்.
கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர்.இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர்.இவர்களின் மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். கடும் உழைப்பாளிகளான இவர்கள், காடுகளை சீர் செய்து அருமையான விவசாய நிலங்களாக மாற்றி கொண்டனர். 1960ற்கு பிறகு விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.
கொங்கு வேளாளர் குலங்கள் 60, 90 என வளர்ந்து தற்போது 141 ஆகியுள்ளன. அழகுமலைக் குறவஞ்சி 18ம் நுற்றாண்டுக்குரியது. இதில் 141 குலங்கள் பற்றி பட்டியல் அமைந்துள்ளது. மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம்.
அரவக்குறிச்சி
கரூர்
அரவக்குறிச்சி
கரூர்
புகளூர்
கரூர்
கிருஷ்ணராயபுரம்
கரூர்
கரூர்
கரூர்
Kongu Vellalar is a sub-caste of Vellalar community found in the western region of Tamil Nadu, which is known as Kongu Nadu. The Kongu Vellala Gounders were classified as a Forward Caste at the time of Indian independence but they successfully requested to be reclassified as a Backward Class in 1975.